எலி - யோகாம்பிகை இளமுருகன்
CLUBHOUSE-இல் வாசிக்கப்படவிருக்கும் சிறுகதை (24.11.2021) நான்கு திசைகளிலும் பொத்துக் கொண்டு வந்தது அந்தச் சத்தம். ஒரே ஒரு மங்கிய குண்டு பல்பின் சத்தம் சிறுவயது முதலே பழகிப்போன தாலாட்டுப் போல் அமைந்திருந்தது. மூன்று கால் காற்றாடியின் எண்ணெய் ஊற்றாது கரைப்பிடித்துக் கிடந்த வயர்களின் அசைவு சத்தம் கீச் கீச்சென கிழித்தது நெஞ்சை. பல நாள் அக்காற்றாடியுடன் போராடியும் அச்சத்தம் நிற்கவில்லை; வயர்கள் அறுந்து மிச்சம் மீதி இருந்த தெம்பினால் ஈடுக்கொடுத்துச் சுழன்றுக் கொண்டிருந்தது. கடிகார முட்களின் 'டக் டக் சத்தம்'. ‘கீச் கீச்’ எலிகலின் விடாத சத்தம். அதுவும் சில காலமாய்ப் பழக்கப்பட்டுப் போனது. பக்கத்து வீட்டின் நாயின் சத்தம். சன்னலுக்கு அருகில் கூடு கட்டியிருந்த சிட்டுக் குருவிகளின் சத்தம். இளசுகளின் மோட்டார் வண்டியின் உறுமல் சத்தம். இம்சை தரும் இவர்களும் எலிக்கூட்டத்தின் ஒரு சில்லுகளே! இதை விடக் கொடுமை எந்நேரமும் பக்கத்து அபார்ட்மெண்டில் வீடு கட்டும் பணியில் எழும்பும் இடியைப் போன்று நெஞ்சை அதிரவைக்கும் பெருஞ்சத்தம். எல்லா சத்தங்களும் கூடி காதுகளில் ஊடுருவி மூளையின் நரம்பிற்குச் சூடாய் வலி