கடா – AK ரமேஷ்
சின்னையாவின் கார் இயந்திரம் திடீரென செயலிழந்தது. சீறிப் பாயும் ஜகுவார் வகை கார் சிணுங்கிக் கொண்டே நின்றது. சாலையின் இரு மருங்கிலும் மண் தரை இருந்ததால் காரைப் பாதுகாப்பாக நிறுத்த ஏதுவாக இருந்தது. நிதானமாக இரு பக்கமும் சமிக்ஞை விளக்கை எறியச் செய்தார். அப்போதுதான் இருட்ட ஆரம்பித்துக் கொண்டிருந்தது. சதுர்தசி திதி முடியும் நேரம் அது. நேர் சாலைதான். பெஸ்தாரி ஜெயாவிலிருந்து ரவாங் செல்லும் பாதை அது. ஸ்ரீ தண்டயுதபாணி ஆலயத்தில் அவசரம் அவசரமாக முருகப் பெருமானைத் தரிசித்து விட்டு இரவு 8.30 மணிக்குள் செராஸில் வீட்டை அடைய திட்டமிட்டிருந்தார் சின்னையா. பெஸ்தாரி ஜெயா சின்னையாவுக்கு அவ்வளவு பழக்கமில்லாத இடம். ஒரே இருட்டு. நீண்ட இடைவெளியில் நிறுவப்பட்டிருந்த சாலை மின்விளக்கின் மெல்லிய ஒளியில் சாலையின் வலது பக்கம் செம்பனை மரங்கள் தெரிந்தன. இடது பக்கம் ஏதோ திறந்த வெளி போல் தெரிந்தது. அங்கு வீடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஓரிரு வாகனங்கள் அவரைக் கடந்து சென்றன. என்ன ஆச்சு ? பெட்ரோல் பாதிக்கு மேல இருக்கு. பெட்டரி மாத்தி எவ்வளவு நாள் ஆச்சு ? அவரால் நினைவு கூற முடியவில்லை. சிங்கப்பூரில் வேலை செ