குறியீடு - திவ்யா சுப்ரமணியம்
அனைத்துலகச் சிறுவர் சிறுகதைப் போட்டியில் முதல் நிலையில் வெற்றிப் பெற்ற கதை - 22.12.2021 “ டேய் எவ்வளவு நேரமா கேள்வி கேட்குறேன் . பதில் சொல்லாம கனவு காணுறீயா என்ன ? டேய் … ”, என்று உரக்க கத்திக் கொண்டு இருந்தார் புதிதாக வந்த காட்சி கலை கல்வி ஆசிரியர் . எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் கண்ணன் மேசையின் மீது தலை சாய்த்துப் படுத்திருந்தான் . இறுதி வரிசையில் அமர்ந்திருந்ததால் அவனுக்குச் சரியாக விளங்கவில்லையோ என்று எண்ணிய ஆசிரியர் அவனை நோக்கி நடந்து வந்தார் . மற்ற மாணவர்கள் சிரித்துக் கொண்டு இருக்கும் சத்தத்தில் கண்ணன் கண் விழித்தான் . ஆசிரியர் அவனை நெறுங்கி வந்து அவனுடைய சட்டையிலிருந்த பெயர் அட்டையைப் பார்த்தார் . அவனும் அவரைப் பார்த்தான் . “ ஓ நீ தான் கண்ணனா ? சரி சரி ”, என்று கூறிவிட்டு நகர்ந்தார் . இதற்கு முன் பாடம் போதித்த காட்சி கலை ஆசிரியர் கொடுத்த வீட்டுப்படத்தை மாணவர்களிடமிருந்து வாங்கி கொண்டிருந்தார் . எப்பொழுதும் போல செழியன் வீட்டுப் பாடத்தைச் செய்யவில்லை . வண்ணம் தீட்டாத தன்னுடைய ஓவியத்தை புத்தகப் பையிலிருந்து எடுக்க பயந்தான் . இந்த வாரமும் ஆசிரியர் வரமாட்டார் ; தப்பித்துவிடலாம் என