கடந்த நதியின் கரையாத கரைகள் - லீனா தர்ஷனா ராமன்
கரும்பலகை புதுக்கவிதை 12: 23.2.2022 நீந்திடும் நிலவினில் நிம்மதியின் நிழல் ...! நிஜத்தில் நிலத்தினில் சிந்தும் கண்ணீர் ...! படைத்தவன் அறிந்திடா பகைவனின் சூழ்ச்சியோ ...! அல்ல படைத்தவன் ஆடும் பந்தயம் இதுவோ ...! விரல் சொடுக்கும் நொடியில் காட்சிகள் மாறின ...! விதியின் விளையாட்டில் வாழ்க்கை வானவில் வெளுத்தன ...! ஓடி ஓடி கடிகாரமுள்ளும் களைத்தது ...! ஆடி பாடிய நாட்களுக்கும் மறைந்தது ...! நான்கு சுவருக்குள் நாளும் நான் களித்தேன் ...! தனிமைக்குத் துணைபோகத் தனிமரமானேன் ...! கொண்டுவந்த கொள்கையெல்லாம் குற்றவாளியானது ...! கோரணி சிறையில் கைதியாக்கப்பட்டது ...! கடந்த நதியின் கரையாத கரையாய் கரைய எண்ணிக் காத்திருக்கிறேன் ...!