எதிர்பார்ப்பு - திவ்யாஸ்ரீ இரகு
பூச்சோங் தமிழ் வாசகர் எழுத்தாளார் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு பக்கக்கதை (குறுங்கதை) போட்டியில் முதல் நிலையில் வெற்றிப்பெற்ற ஒரு பக்கக்கதை. இரண்டு நாட்களாய் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சுந்தரேசன் இன்றுதான் வீட்டில் இருக்கிறான். ஆனால் , காரணமே இல்லாமல் காலையிலேயே வரவேற்பறைக்கும் வாசலுக்கும் நடை போட்டுக்கொண்டிருந்தான். காரணம் புரியாமல் அவன் மனைவி சுந்தரி தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தாள் . பொறுமையிழந்தவள் காரணத்தைக் கணவனிடமே கேட்டுவிட்டாள். எதிர்பார்த்த பதில் வரவில்லை. சோபாவில் போய் அவசரமாய் உட்கார்ந்து கொண்டான் சுந்தரேசன். முகத்தில் ஏதோ எதிர்பார்ப்பு. அதைக் கவனிக்கத் தவறவில்லை சுந்தரி. பத்து நிமிடங்கள்கூட கடந்திருக்காது. சுந்தரேசன் அடித்துப் பிடித்துக்கொண்டு வாசலை நோக்கி ஓடினான். வீட்டின் முன்னே சுந்தரேசனின் நண்பன் கோபால் தன் ஹோண்டா செவண்டி மோட்டாரில் தரிசனம் தந்தான். சுந்தரேசன் ஆர்வமாய் ஏதோ கேட்க , இல்லை என்பதற்கு அடையாளமாய்த் தலையை ஆட்டினான் கோபால். கோபால் விடைபெற்றுக்கொள்ள , சுந்தரசேன் குனிந்த தலை நிமிராமல் உள்ளே வந்தான். அவன் நடையில் தளர்ச்சி. “என்னங்க..! ஏன் ? என்ன ஆச